தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலாங்கரையில் இன்று அதிகாலை நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

துரைப்பாக்கம்: நீலாங்கரையில் உள்ள நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. சென்னை நீலாங்கரையில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீடு உள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசு துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம நபர் தகவல் தெரிவித்து, தொடர்பை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நீலாங்கரை போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு அவரது வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில், அவரது வீட்டிலிருந்து எவ்வித வெடி பொருட்களும் சிக்கவில்லை. எனவே, இது வெறும் புரளி என போலீசாருக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News