தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் அதிகாரிகளுக்கு நயினார் திடீர் எச்சரிக்கை

 

Advertisement

காரைக்குடி: தமிழக பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் நேற்றுமுன்தினம் துவங்கினார். இரண்டாவது நாளான நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே அவர் பேசுகையில், ‘‘இந்த கூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் பூக்களை தூவ அனுமதி கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியை நான் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. காவல்துறைக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நான் சொல்லி கொள்கிறேன். உங்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

ஆட்சி மாற்றம் வரும்போது, நீங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரசார நேரத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு பிரசாரத்திற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக வருவார்’’ என்றார்.

ஆட்சி அதிகாரம் வேண்டும்: சிவகங்கை மாவட்ட பாஜ தலைவர் பாண்டித்துரை பேசுகையில், ‘‘ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும்’’ என்றார். இது கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement