தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நயினார் நாகேந்திரன் வீட்டை நள்ளிரவில் புகைப்படம் எடுத்த மர்ம நபர்கள்

 

Advertisement

நெல்லை: நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரபல நடிகர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.35 மணியளவில், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டின் அருகே பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த இருவர், அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், நயினார் நாகேந்திரனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவரது உதவியாளர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் வீட்டை புகைப்படம் எடுப்பதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து நோட்டமிடுவதும் அந்த கேமராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று காலை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அறந்தாங்கியில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்புடன் சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருந்ததால் வீட்டில் யாரும் இல்லை.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘`இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புகார் எதுவும் இன்று காலை வரை அளிக்கப்பட வில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

Advertisement