தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை: ஜார்கண்டில் பாதுகாப்புப் படை அதிரடி

ராஞ்சி: ஜார்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய தளபதி உள்பட 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 7ம் தேதி சாய்பாசா பகுதியில் மண்டலத் தளபதி அமித் ஹன்ஸ்டாவும், நேற்று முன்தினம் பலாமூ மாவட்டத்தில் ஒரு நக்சலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில், ஹசாரிபாக் மாவட்டம் கோர்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதிபிரி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கோப்ரா படையின் 209வது பட்டாலியன் மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய தளபதி சஹ்தேவ் சோரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரும் ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த ரகுநாத் ஹெம்ப்ராம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிர்சென் கன்ஜு என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Advertisement

Related News