தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கடற்படை வீரரின் மனைவி கொடூர கொலை: டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு

எட்டாவா: பயணச்சீட்டு தகராறில் கடற்படை வீரரின் மனைவியை ஓடும் ரயிலில் இருந்து டிடிஇ தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா அருகே கடந்த 26ம் தேதி ரயில் தண்டவாளத்தில் ஆர்த்தி யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பாட்னாவிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம் செய்த இவருக்கும், ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கும் (டிடிஇ) இடையே ஏற்பட்ட தகராறில், அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து டிடிஇ தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

கடற்படை வீரரின் மனைவியான இவரது மரணம் தொடர்பான விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘டிக்கெட் விவகாரத்தில் ஆர்த்தியின் உடமைகளை முதலில் வெளியே வீசிய டிடிஇ, பின்னர் அவரையும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இதை மறுத்துள்ள டிடிஇ சந்தோஷ் குமார், ‘பயணச் சீட்டு மாறி இருந்ததால் பொதுப் பெட்டிக்குச் செல்லச் சொன்னபோது அவரே குதித்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பெண்ணின் கைப்பையும் உடலும் வெகுத் தொலைவில் வெவ்வேறு இடங்களில் கிடந்ததால், இது திட்டமிட்ட செயல் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து டிடிஇ சந்தோஷ் குமார் மீது கொலைக் குற்றம் அல்லாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News