தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி: பா.ஜ தலைவர் புது யோசனை

இந்தூர்: பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி அளிக்க வேண்டும் என்று ம.பி. பாஜ நிர்வாகி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. அக்.12ம் தேதி வரை நடக்கும் இந்த விழா வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது கர்பா எனும் கோலாட்ட நடனங்கள் இடம்பெறுவது வழக்கம். இதில் முன்பின் அறிமுகம் இல்லாத இளைஞர்களுடனும் இணைந்து இளம்பெண்கள் நடனமாடுவது உண்டு. இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர்களும் நுழைந்து விடுவதாகப் புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் புதிய உத்தியை நிகழ்ச்சி நடத்துவோர் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு அதற்கான சர்ச்சைக்குரிய யோசனையை இந்தூர் ஊரக மாவட்ட பாஜ தலைவர் சின்ட்டு வர்மா அளித்துள்ளார்.
Advertisement

அவர் கூறுகையில்.’ இந்த வருடம் கர்பா பந்தலுக்கு நுழையும் முன் அளிக்கப்படும் பிரசாதத்தில் மாற்றம் தேவை. இதில் நமது கோமாதா பசுவின் கோமியத்தை உள்ளே நுழையும் அனைவருக்கும் பருகுவதற்காக அளிக்க வேண்டும். இத்துடன் நெற்றியில் திலகம் சந்தனத்துடன் பூசிக்கொள்ள வேண்டும் .தற்போது ஆதார் அட்டை மூலம் கர்பா பந்தலில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அட்டையில் மார்பிங் செய்தும் பெயர்களை மாற்றலாம். எனவே பசுவின் கோமியத்தை பருக அளிப்பது, நமக்கு கர்பா பந்தலில் பாதுகாப்பை அளிக்கும். இதைப் பருகாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்றார்.

Advertisement

Related News