தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்றம்பள்ளி அருகே 3 யூனிட் செயற்கை மணல் பறிமுதல்

Advertisement

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே 3 யூனிட் செயற்கை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள செட்டேரி டேம் பகுதியை சுற்றிலும் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழைக்காரணமாக செட்டேரி அணை நிரம்பியது. இதனால் விவசாய பணிகள் மீண்டும் களைகட்ட ெதாடங்கியது.

இந்நிலையில் மணல் மாபியா கும்பல், அங்குள்ள அணை மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் மணல் அள்ளி விற்று வருகின்றனர். குறிப்பாக டேம் அருகே விவசாய நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மண் மற்றும் மணலை செயற்கையாக தயாரித்து விற்று வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை அகற்றினர்.

இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாத வகையில் கடந்த வாரம் மீண்டும் செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை அமைத்து இரவோடு இரவாக செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்வதை தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்றிரவு நாட்றம்பள்ளி தாசில்தார் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 3 யூனிட் செயற்கை மணலை பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Related News