தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய நெடுஞ்சாலை, சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு: சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த ஆவணங்கள் சிக்கின

சென்னை: போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக சென்னையில் இரும்பு வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் சிலர் போலி ஆவணம் மூலம் நிலத்திற்கான உரிமையாளர்கள் என பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு

Advertisement

கின்றனர்.

அந்த விசாரணையில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிப்காட் அமைய உள்ள பகுதிகளை முன்பே அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலங்களை மொத்தமாக வாங்கியதும், அதன் பிறகு அரசு திட்டம் வந்த பிறகு, அந்த இடத்தை உறவினர்கள் என பல்வேறு பெயர்களில் போலி ஆவணம் தயாரித்து நிலத்திற்கான உரிமையாளர்கள் என நிலத்திற்கு பல கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றதும் தெரியவந்தது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் சில தொழிலதிபர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கலைச்செல்வன் வீட்டில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கீழ்ப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இரும்பு வியாபாரியான நிர்மல்குமார் வீட்டிலா 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையில் வசித்து வரும் நகைக்கடை உரிமையாளர் சேட் என்பவரின் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வடபழனி வஉசி நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் வசித்து வரும் தொழிலதிபரான பிரகாஷ் என்பவர் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், இவர்களுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்கள் என சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மொத்தம் 15 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனை நடந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடந்த சோதனையில் தேசிய ெநடுஞ்சாலைக்கு நிலங்கள் வழங்கியது தொடர்பான ஆவணங்கள், நிலத்திற்கான இழப்பீடு பெற்ற ஆவணங்கள் மற்றும் இழப்பீடாக பெற்ற பல கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்த ஆவணங்கள் பல கிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை முடிந்த பிறகு தான் முறைகேடு தொடர்பான அனைத்து விவரங்களும் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News