தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது: மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் தயாரித்துள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல், சங்க பரிவாரின் அரசியல் பரப்புரை குறிப்பாகவே எழுதப்பட்டுள்ளது. பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோரது வரலாற்று நிகழ்வுகளை இழிவுபடுத்தி, உண்மை வரலாற்றை ஒரு கற்பனை கதையாக மாற்றியுள்ளனர். இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தானின் வீரத்தையும் திட்டமிட்டே பாடநூலில் இடம் பெறச் செய்யவில்லை.
Advertisement

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது என்பதற்கான சான்றாக இந்த பாடநூல் அமைந்துள்ளது. இந்தத் தவறான பாடநூல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய குழுமத்தின் நம்பகத்தன்மையைத் தகர்த்துள்ளது. வரலாற்றுத் திரிபுகள் நிறைந்த இந்த எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

Advertisement