தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேஷனல் ஹெரால்டு வழக்கு குற்றப்பத்திரிகையில் போதிய ஆவணங்கள் இல்லை: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Advertisement

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெயரும் அதில் அமலாக்கத்துறை இணைத்துள்ளது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் எதுவும் தற்போது பிறப்பிக்க முடியாது.

ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. முதலில் விடுபட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் அதனை ஆய்வு செய்து முடிவெடுக்கலாம். எந்த ஒரு உத்தரவாக இருந்தாலும் அதில் குறைபாடு உள்ளதா என்று நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அது எங்களது முக்கிய கடமை ஆகும். எனவே இந்த வழக்கில் நாங்கள் அதாவது நீதிமன்றம் திருப்தி அடைவதற்கு முன்னதாக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக நீதிபதி தெரிவித்தார்.

Advertisement