தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; தேசிய விருது பெற்ற பாடகர் விவாகரத்து: மகளுக்காக இணைந்திருப்போம் என பதிவு

மும்பை: தேசிய விருது பெற்ற பிரபல மராத்தி பாடகரும், நடிகருமான ராகுல் தேஷ்பாண்டே, தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபல மராத்தி திரையுலகில் முன்னணிப் பாடகரும், நடிகருமான ராகுல் தேஷ்பாண்டே, தனது மனைவி நேஹாவை 17 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்களது சட்டப்பூர்வமான பிரிவு, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமே சுமுகமாக முடிவடைந்துவிட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் தனது பதிவில், ‘17 ஆண்டுகால திருமண வாழ்க்கை மற்றும் எண்ணற்ற பசுமையான நினைவுகளுக்குப் பிறகு, நானும் நேஹாவும் பரஸ்பரம் பிரிந்து, தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளோம். இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்தையும் சரியாகக் கையாள்வதற்கும் சிறிது காலம் எடுத்துக்கொண்டேன். எங்களது மகள் ரேணுகாவை இருவரும் இணைந்து வளர்ப்பதே எங்களின் தலையாய கடமை. மகளுக்கு நிலையான மற்றும் அன்பான ஆதரவை வழங்குவதற்காக, நானும் நேஹாவும் பெற்றோர்களாக இணைந்து செயல்படுவோம். தனிநபர்களாக நாங்கள் பிரிந்தாலும், பெற்றோர்களாக எங்கள் பிணைப்பும், ஒருவருக்கொருவர் நாங்கள் வைத்திருக்கும் மரியாதையும் எப்போதும் வலுவாக இருக்கும்.

இந்த நேரத்தில் எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து, அனைவரும் எங்களைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். ‘மீ வசந்த்ராவ்’ என்ற மராத்தித் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்ற ராகுல் தேஷ்பாண்டே, மறைந்த புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர் வசந்த்ராவ் தேஷ்பாண்டேவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement