தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் கல்லூரிக்கு ஆய்வுக்கு சென்ற போது லஞ்சம் வாங்கிய டாக்டர் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: தேசிய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை

Advertisement

புதுடெல்லி: தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமான மதிப்பீட்டு அறிக்கை தருவதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான மூத்த டாக்டரை கருப்பு பட்டியலில் சேர்த்து தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வியின் தரம், போதிய பேராசிரியர்கள் நியமனம், அடிப்படை வசதிகள் குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் நடத்தும் ஆய்வில் பல மோசடிகள் நடந்த விவகாரம் சிபிஐ விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மடாதிபதி உட்பட 35 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த விவகாரம் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பாகி உள்ள நிலையில், சிபிஐ கைது செய்த மூத்த டாக்டர் ஒருவரை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான மதிப்பீட்டு அறிக்கையை தர ரூ.10 லட்சம் வாங்கியதாக அந்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரி 2025-26 கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் தற்போதைய இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய பாடப்பிரிவுகளை தொடங்கவும் என்எம்சி தடை விதித்துள்ளது.

இது குறித்து என்எம்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் கல்லூரிகளில் ஆய்வு நடத்த அனுப்பப்படும் மதிப்பீட்டாளர்கள் என்எம்சியால் பணி அமர்த்தப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறார்கள். என்எம்சி அதன் அனைத்து பணிகளிலும் மிகுந்த நேர்மையை கொண்டிருக்கவும், அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் உறுதிபூண்டுள்ளது. எனவே எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் ஊழலையும் கவுன்சில் பொறுத்துக் கொள்ளாது. அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்’ என கூறி உள்ளது.

Advertisement

Related News