தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாதக நிர்வாகிகள் விலகல் சீமான் மீது குற்றச்சாட்டு

Advertisement

சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அக்கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். தற்போது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் விலகியுள்ளனர். இதுதொடர்பாக தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தங்கம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அண்மைக் கால நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது. சேலத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம் ஆட்கள் குறைப்பு, ஊதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஆலையை மூடுவதாக தெரிவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து, தொழிற்சங்கத்தின் சார்பில் பல மாதங்களாக போராடி வருகிறோம். இதற்கு ஆதரவு தெரிவிக்க, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டுகொள்ளவில்லை. மேலும், எங்களுக்கு போராட்ட ஆதரவோ, போராட்ட வழிகாட்டுதலோ வழங்கவில்லை. இதனால் மனவேதனையுடன் அத்தொழிற்சங்கத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ேடார் விலகுகிறோம். அதேசமயம் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News