நாதகவுக்கு டாடா காட்டும் மாவட்ட செயலாளர்கள்
Advertisement
இதுகுறித்து கட்சியில் இருந்து விலகியவர்கள் கூறுகையில், ‘நாம் தமிழர் கட்சியின் கீழ் மட்டத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து கடிதம் வாயிலாக தலைமைக்கு தெரிவித்து வருகிறோம். ஆனாலும், அந்த கடிதம் தலைமையை சென்றடையவில்லை. வேட்பாளர் நியமனத்தில் எங்களை அழைத்து ஆலோசனை செய்யவில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. எளிய முறையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சி தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல், முன்பிருந்த கட்சி கட்டமைப்பு தற்போது இல்லை. இதனால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகினோம்’ என்றனர்.
Advertisement