தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரிக்குடி பகுதியில் தொடர் மழையால் விவசாய பணி விறுவிறு

திருச்சுழி : நரிக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கடலை, நெல், பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு நன்கு செழித்து வளர்ந்து கண்னுக்கு குளிர்ச்சியாக காணப்படுகின்றன.

Advertisement

எனினும் தொடர் மழை காரணமாக பயிர்களில் நோய் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. இதனால் மருந்து அடிக்கும் கருவி வைத்து அடிப்பதற்கு ஆட்கள் கிடைக்கததால் தற்போது முதன் முறையாக உலக்குடி, ஆனைக்குளம், வேளானூரணி, காத்தான்பட்டி, இழுப்பையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ட்ரோன் மூலமாக வயல் வெளிகளில் மருந்து தெளிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு ட்ரோன் மூலம் சுமார் 10 நிமிடங்களில் மருந்து தெளிக்க முடிவதால் நேரம் அதிகளவில் மிச்சமாகிறது. வேலை ஆட்கள் மூலமாக மருந்து தெளிக்கும் போது ரூ.500 முதல் ரூ.800 வரை செலவழிக்க வேண்டி இருந்தது.

ஆனால் தற்போது அந்த செலவினம் குறைந்துள்ளது. மேலும் மருந்து தெளித்த சில நாட்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

Advertisement

Related News