தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெயர், படம், குரலை பயன்படுத்த தடை கோரி நடிகையான எம்பி ஜெயா பச்சன் ஐகோர்ட்டில் மனு: அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

 

Advertisement

புதுடெல்லி: தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை வர்த்தக நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீப காலமாக, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை, தங்களின் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.

அந்த வகையில், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்கள் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்க இடைக்காலத் தடைகளைப் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சனும் தன் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜெயா பச்சன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சிலர் எனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர். பலர் எனது படங்களைப் பயன்படுத்தி டி-ஷர்ட்கள், போஸ்டர்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களில் எனது அனுமதியின்றி எனது பெயர், குரல், படம் ஆகியவற்றை வர்த்தக ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அமேசான், ஃபேஸ்புக், ஈபே போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், திரைப்பட போஸ்டர்களில் உள்ள புகைப்படங்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்பதால், அதுகுறித்த வாதங்களை மனுவில் திருத்தம் செய்யுமாறு ஜெயா பச்சன் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement

Related News