தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்

*இரவில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Advertisement

நாமக்கல் : நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில் திருச்சி, துறையூர், மோகனூர், சேந்தமங்கலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன. இந்த பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறம் வழியாக செல்கிறது.

இதனால், இரவு நேரங்களில் மக்கள் பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், புறக்காவல் நிலையத்தில் பகலில் கூட போலீசார் இருப்பதில்லை. இரவு நேரத்தில் அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 அரசு மதுக்கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் அப்பகுதியில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் தனியாக நிற்கும் பயணிகளிடம் அத்துமீறி வருகின்றனர்.

மேலும், போதையில் மட்டையாகும் நபர்களிடமிருந்து பணம், செல்போனை பறித்துச் செல்கின்றனர். இதற்கு பயந்து பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்காரர்கள் இரவு 9 மணிக்குள் கடையை அடைத்து விட்டு சென்று விடுகின்றனர். பெயரளவுக்கு மட்டும் உள்ள புறக்காவல் நிலையத்தை செயல்பட காவல்துறை உயரதிகரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News