தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேக்கத்தால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

புழல்: செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் மழைநீரில் ஊர்ந்தபடி கடந்து செல்வதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையும் ஒன்றாகும்.

Advertisement

இச்சாலை சென்னை, செங்குன்றம், தச்சூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. இச்சாலையை புனரமைக்கும் பணிகளுக்காக, செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் ஒரு தனியார் நிறுவனம் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக புழல், செங்குன்றம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் சுங்கச்சாவடி வழியே ஆந்திரா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மழைநீரில் ஊர்ந்தபடி தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும், இதுபற்றி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றி, சாலையை சீரமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News