தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘நயினார் நாகேந்திரன் சமரசம் பேசுகிறாரா?’ சைலண்ட் மோடில் ஓ.பன்னீர்செல்வம்

தேனி: பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓபிஎஸ் மவுனமாக சென்றார். தேனி மாவட்டம், பெரியகுளம் இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை கேரள மாநிலம், ஆலப்புழா, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைக்கு காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரிடம் செய்தியாளர்கள், ‘செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அமித்ஷாவை சந்திப்பாரா?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பன்னீர்செல்வம், `‘தெரியலையே... என்னிடம் தகவல் சொல்லவில்லையே’’ என்றார்.

Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கட்சியை உடைக்க பல பேர் சதி செய்கிறார்கள். அதை தவிடு பொடியாக்குவோம்’’ என பேசி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, `‘நான் கோயிலுக்கு செல்கிறேன். திரும்பி வந்து பதில் கூறுகிறேன்’’ என கூறிவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். மேலும், பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமரசம் பேச இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார். செங்கோட்டையன் டெல்லி வழியாக ஹரித்வார் செல்வதாக கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கேரள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement