தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் அருகே மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மின் தடை காரணமாக 400 காடை கோழி குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன. நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் ஊராட்சியில், காடை குஞ்சு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து உள்ளனர். இதற்கான காடை குஞ்சுகள், கோவையில் இருந்த கொண்டு வரப்படும்.

Advertisement

சமீபத்தில் 4000 காடை கோழி குஞ்சுகள் கொண்டு வரப்பட்டன. காடை கோழிக்குஞ்சுகள் குறிப்பிட்ட பருவத்தை அடைவதற்காக அந்த வளாகத்தில் உள்ள 3 அறைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அவை வளர்க்கப்பட்டு வருகின்றன. மின் விளக்கு வெப்பம் இருந்தால் தான் காடை கோழிக்குஞ்சுகள் வளரும். இந்தநிலையில் சமீபத்தில் அடிக்கடி அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக மின் குமிழிக்குள் இருந்த காடை கோழி குஞ்சுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சுமார் 400 காடை கோழி குஞ்சுகள் இறந்து விட்டன. எஞ்சிய கோழிக்குஞ்சுகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேரேகால் புதூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள சேவை மையத்தில் தான் காடை குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இவைகளால் துர்நாற்றம் வீசி அருகில் உள்ள குடியிருப்பில் மக்கள் இருக்க முடியவில்லை. வாந்தியும் குமட்டலும் ஏற்பட்டு உணவு அருந்த முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். தற்போது மின் பிரச்சினை காரணமாக காடை குஞ்சுகள் இறந்துள்ளன. இவை பரிதாபமாக உள்ளது. போதிய வசதிகள் செய்து, வேறு இடத்துக்கு இதை மாற்ற வேண்டும் என்றனர்.

Advertisement

Related News