தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். உடன் இருந்த மாணவியின் தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்பி உடன் ஸ்கூட்டியில் பள்ளிக்குச் செல்லும் போது விபத்து நடந்துள்ளது. உரிய தடுப்பு அமைக்காததே விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம் மேலஇழுப்புர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் அஸ்வினி திருவாரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி தனது சித்தப்பா மகன் அவினாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் குருக்கத்தி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது நாகர்கோவிலில் இருந்து வேளாங்கன்னி சென்ற SETC அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இருசக்கர வாகனம் அரசு பேருந்துக்கு அடியில் சிக்கியது. இந்த விபத்தினால் அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தம்பி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அவரது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகை - திருவாரூர் கிழக்கு கடற்கரை சாலை நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement