தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் நிறுத்தம்

நாகை: வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் நவம்பர் 30ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த கப்பல் வாரத்தில் செவ்வாய்க் கிழமையைத் தவிர்த்து 6 நாட்கள் மட்டுமே சேவை நடைபெற்று வந்தது. பண்டிகை காலத்தையொட்டி இருநாட்டு பயணிகளின் அதிகரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் வாரம் முழுவதும் கப்பல் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 14, 21ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) கூட சேவை நடைபெற்றது.

இதற்கு பயண கட்டணமாக நாகையிலிருந்து இலங்கை சென்று வர ரூ.8,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாகையிலிருந்து இலங்கை செல்ல ரூ.4,500, இலங்கையிலிருந்து நாகை திரும்ப ரூ.3,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (26ம் தேதி) முதல் வரும் டிசம்பர் மாதம் வரை நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Advertisement

Related News