தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தே.பா. சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வாங்சுக்கின் மனைவி மனு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரியும் நடந்த போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். இப்போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து தீவிரமாக பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் 12 மாதங்கள் வரை விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்க முடியும். இந்நிலையில், வாங்சுக் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisement

இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாங்சுங்கின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘மனுதாரருக்கு அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கூட போலீசார் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரியாமல் அதை சவால் செய்ய முடியாது’’ என்றார். இதற்கு சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கைது செய்யப்பட்டவருக்கு மட்டுமே காரணத்தை தெரிவித்தால் போதும். அவரது மனைவிக்கு தெரிவிக்க வேண்டுமென்ற சட்டப்பூர்வ தேவை எதுவும் இல்லை. ஆனாலும் கைதுக்கான காரணங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்கிறோம்’’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக ஒன்றிய அரசும், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகமும் பதிலளிக்க நோட்டீஸ் விடுத்தனர். மேலும், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement