தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநங்கையுடன் தங்கிய வாலிபர் மர்ம மரணம்; போலீசில் பெற்றோர் புகார்

 

Advertisement

அண்ணாநகர்: கோயம்பேடு, நியூ காலனியில் கடந்த சில மாதங்களாக திருநங்கையுடன் ஒரு வாலிபர் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பதும், இவர் ஐயப்பன்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வந்ததும், கோயம்பேட்டில் வசிக்கும் திருநங்கையுடன் இரவு நேரங்களில் தங்கி வந்ததும் தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு திருநங்கையுடன் தங்கியபோது, அவர் தற்கொலை செய்தாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மனோஜின் சாவில் மர்மம் இருப்பதாக கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மனோஜின் சடலத்தை நேற்று காலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மனோஜ் இறப்புக்கான காரணம் தெரிய வரும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement