தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் சொத்து வாங்கியதில் பிரச்னையா? பத்திரப்பதிவு ஆபீசில் விசாரணை

Advertisement

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் ெதாடர்பாக, அவர் சொத்து வாங்கியது, விற்றதில் பிரச்னை ஏதும் உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள், அவரது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் மூன்று ஆண்டுகளாக அவரது வங்கி கணக்குகளிலுள்ள வரவு, செலவு கணக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் மரணத்திற்கு முன்பாக வாங்கிய சொத்துக்களும், விற்பனை செய்த சொத்துக்களும் தொடர்பாக ஏதேனும் பிரச்னை உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் (4ம் தேதி) நடக்கவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே அவர் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன் சிறிய அளவிலான சொத்துக்கள் மகள் மற்றும் 2 மகன்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூகுள் பே மூலம் மகள் கேத்ரினுக்கு ரூ.10 ஆயிரமும், 2வது மகன் ஜோ மார்டினுக்கு ரூ.15 ஆயிரமும் அனுப்பி வைத்த விவரமும் தெரிய வந்துள்ளது.

 

Advertisement

Related News