தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மர்மவிலங்கு கடித்து இறந்து கிடந்த நாய்; ஆலஞ்சோலையில் சிறுத்தை நடமாட்டமா?: பொதுமக்கள் அச்சம்

அருமனை: அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் பெல்லர் (45). தோட்டம் அமைத்து அதில் வாழை சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் பகல் நேரங்களில் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். மேலும் தோட்டத்தில் இரவு காவலுக்கு 3 நாய்கள் விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிறிய செடியில் கட்டியிருந்த ஒரு நாயை காணவில்லை.

Advertisement

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு நாயை கட்டி போட்டிருந்தனர். மற்ற நாய்களை கட்டாமல் விட்டு இருந்தனர். நேற்று தோட்டத்தில் கட்டி போட்டிருந்த நாயை மர்மவிலங்கு கொன்று உடலின் பெரும் பகுதியை குதறி தின்ற நிலையில் காணப்பட்டது. மற்ற நாயும் ஒருவித பயத்துடன் நின்றிருந்தன. இதனால் நாயை கொன்றது சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மர்மவிலங்கா? என தெரியவில்லை. எனினும் அப்பகுதி மக்கள் நாயை கொன்று தின்றது சிறுத்தை தான் கூறி அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற களியல் வனத்துறையினர் நாயை இறந்து கிடந்த இடத்ைத பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் எந்த விலங்கின் கால் தடம் உள்ளதா? என ஆய்வு நடத்தினர். தோட்டத்தில் காவலுக்கு நிறுத்திய நாயை மர்மவிலங்கு கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News