தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒடிசா சிறுமிக்கு டெல்லி எய்ம்சில் மேல் சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்

Advertisement

புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பயாபர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அதேபகுதியில் உள்ள தன் தோழி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமி புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

70 சதவீத தீக்காயமடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி விமானம் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில்,சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. ரத்த அழுத்தமும் சீராக இருக்கிறது என்று புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியான பிஜேடி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பாலங்கா காவல் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பிஜேடி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

Advertisement

Related News