மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
Advertisement
இதுகுறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் மாயமான அன்வருல் அசிம் அனார் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அன்வருல்லின் சடலம் மீட்கப்பட்டு வங்கதேசம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்வருல் கொலை வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறை முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது” என்று கூறினார். இதனிடையே அன்வருல்லின் மரணத்துக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
Advertisement