தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

டாக்கா: மேற்குவங்கத்துக்கு வந்து மாயமான வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசிம் அனார்(56). இவர் வங்கதேசத்தின் ஜெனைடா-4 தொகுதியில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்வருல் அசிம் அனார் கடந்த 12ம் தேதி தனிப்பட்ட பயணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அங்கு பாரா நகர் பகுதியில் தன் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வௌியே சென்ற அன்வருல் அசிம், வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அன்வருலின் நண்பர்கள் பாராநகர் காவல்துறையில் புகாரளித்தனர். காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக அன்வருலை தேடி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வௌியாகி உள்ளது.
Advertisement

இதுகுறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் மாயமான அன்வருல் அசிம் அனார் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அன்வருல்லின் சடலம் மீட்கப்பட்டு வங்கதேசம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்வருல் கொலை வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறை முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது” என்று கூறினார். இதனிடையே அன்வருல்லின் மரணத்துக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News