தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாப்பூரில் 10 நாள் கோலாகலம் நவராத்திரி விழா நாளை தொடக்கம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர்- கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நாளை தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நவராத்திரி பெருவிழா கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

Advertisement

ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் தமிழ் இசைச்சுடர் சுசித்ரா பாலசுப்பிரமணியம் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தினமும் ஒரு வழிபாட்டுடன் இறையருட் செல்வன் எச்.சூரியநாராயணன், சின்னத்திரை புகழ் அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி மாலதி,

சின்னத்திரை புகழ் முத்துசிற்பி மற்றும் கீர்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, தேசிய விருது பெற்ற டாக்டர் ஆர்.காஷ்யபமகேஷ் குழுவினரின் பக்தி இசை, நாட்டிய சிரோன்மணி உமா தினேஷ் - சாய் முத்ரா நடன குழுவினரின பரத நாட்டியம், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி தேச மங்கையர்க்கரசி ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாடமி குழுவினரின் பரதம், சின்னத்திரை புகழ் சியாமளா,

செல்வி சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி வேல்முருகன் மற்றும் சின்னத்திரை புகழ் திருமதி சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், கின்னஸ் புகழ் விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கலைமாமணி கோபிகா வர்மாவின் மோகினி ஆட்டம், கலைமாமணி வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீனப் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமய சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News