தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா: நேர்த்திக்கடனாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்காக தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிகளை கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கம கம விருந்தும் பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி ஆலயத்தில் மனம் உருகி வேண்டுதல் வைத்த தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் குழந்தையை ஏலம் விட ஆலயத்திற்கு வந்து இருந்தனர். இந்த ஏலத்தில் குழந்தை உறவினர்களே குழந்தைகளை ஏலத்தில் எடுத்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோயிலில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் ரூ.100 வரை ரூ.5,000 வரை ஏலம் போயின. ஏலத்தொகையை காணிக்கையாக தேவாலயத்திற்கு வழங்குகின்றனர். இதனிடையே காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழி, அரிசி உள்ளிட்டவை கொண்டு விருந்து தயாரிக்கப்பட்டது. விருந்து தயாரிக்கும் பணியில் மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக மக்களும் பங்கேற்கின்றனர். தேவாலய வளாகத்திலேயே 2,000 கிலோ ஆட்டு கறியுடன், 5,000 கோழி கறியுடன் 150 முட்டை அரிசி கொண்டு தயாரான விருந்து மாலை முதல் விடிய விடிய பக்தர்களுக்கு பரிமாற்றப்பட்டது. புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா இன்று சப்பரபவனியுடன் நிறைவடைகிறது.