தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முஸ்லிம்கள் பாஜவுக்கு வாக்களிப்பதில்லை துரோகிகளின் வாக்கு எங்களுக்கு வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சை

பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அர்வால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: ஒருமுறை நான் ஒரு ‘மவுல்வி’யிடம் (இஸ்லாமிய மதகுரு) ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை உள்ளதா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார். அத்தகைய அட்டைகள் இந்து-முஸ்லிம் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? என கேட்டேன்.

Advertisement

அவர் இல்லை என்றார். எனக்கு வாக்களித்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார். கடவுள் சத்தியமாக சொல்லுங்கள் என்றதும், இல்லை என பதிலளித்தார். ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களையும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அவர்கள் வாக்களிப்பதில்லை. இத்தகையவர்களை நாங்கள் நமக் ஹராம் (துரோகிகள்) என அழைக்கிறோம்.

நமக் ஹராம் வாக்குகளை நான் விரும்பவில்லை என அந்த மவுல்வியிடம் கூறினேன். பிரதமர் மோடி உங்களை துன்புறுத்தினரா என்று அவரிடம் கேட்டதற்கு இல்லை என பதிலளித்தார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காவும் வேலை செய்கிறது. அதனால் பீகார் இப்போது மாறிவிட்டது.இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement