தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக் குறைவால் காலமானார்

 

Advertisement

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் இருந்தார். தேவாவின் சகோதரர்கள் சபேஷ் - முரளி இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். இவர்கள் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

அதேபோல் ஆட்டோகிராப் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கின்றனர்.இந்த நிலையில் சபேஷ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சபேஷ் - முரளியின் இசை தொடக்கம் என்பது கடந்த 2001-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சமுத்திரம்’ படம் தான். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் - முரளி, அடுத்து ’நைனா’, ‘பாறை’, ‘அயோத்யா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல ‘ஜோடி’ படம் தொடங்கி, ‘பாரிஜாதம்’, ‘தலைமகன்’, ‘அரசாங்கம்’, ‘சிந்து சமவெளி’, ‘அன்னக்கொடி’, ‘கொடி வீரன்’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Advertisement

Related News