தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சி முத்தியால்பேட்டையில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முத்தியால்பேட்டை, இந்திரா நகரில் உள்ள முருகன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள முத்தியால்பேட்டை, இந்திரா நகர் பிரதான பிரதான சாலையில் செந்தூர் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், தனபூஜைகள் நடந்தன. நேற்று வருண பூஜை, சாந்தி ஹோமம், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல் நடந்தன.

இதைத் தொடர்ந்து, முருகன் கோயிலில் மகா பூர்ணாஹீதி தீபாராதனைக்குப் பிறகு, யாகசாலையில் இருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் செந்தூர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடந்தன. இதில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், வாலாஜாபாத் ஒன்றியத் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், துணை தலைவர் பி.சேகர், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் முன்னா (எ) முனீர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Related News