பரமத்தி வேலூர் அருகே நகை-பணத்திற்காக தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்
Advertisement
பயந்து போன சாமியாத்தாள் கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் கழுத்து மற்றும் வாய் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமியாத்தாள், செல்போன் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். உடனே, அவர்கள் சாமியாத்தாளை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சேலம் சரக டிஐஜி உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, தோட்டத்து வீட்டிற்கு செல்லும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement