தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை: தந்தை, மகன் கைது

Advertisement

தஞ்சை: இடப்பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் கடப்பாரையால் தாக்கி வாலிபரை கொலை செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் வேட்டமங்கலம் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலையா. இவரது மகன் வெற்றிவேல்(30). இவரது சித்தப்பா அழகர்(50). அருகருகே வசித்து வரும் இரு குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக பொதுவழி, கழிவறை கட்டுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு இடப்பிரச்னை தொடர்பாக அழகருக்கும், வெற்றிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர் மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், சந்துரு ஆகியோர் வெற்றிவேலை கடப்பாரையால் தாக்கினர். இதை தடுத்த வெற்றிவேலின் மைத்துனர் சுரேசும் தாக்கப்பட்டார்.

இதில் காயமடைந்த வெற்றிவேல், சுரேசை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வெற்றிவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த சுரேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அழகர், சந்துருவை கைது செய்தனர். தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News