தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை

கொல்கத்தா: கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட வங்கதேச எம்பியின் சதை பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்பின் செப்டிக் டேங்கில் மீட்கப்பட்டது. வங்கதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் அனார் என்பவர், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்தார். அதற்கு அடுத்தநாள் முதல் அவரை காணவில்லை. தொடர் விசாரணையில், அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாய்களில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீசாரும், வங்கதேசத்தை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனாரை, அவரது அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேச தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அன்வருல் அசிமின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டதால், பல இடங்களில் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடக்கு 24 பர்கானாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் செப்டிக் டேங்கில் அன்வருல் அசிமின் தோலுரிக்கப்பட்டு வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கடைத்துள்ளன. அவற்றை கைப்பற்றி தடயவியல் பகுப்பாய்வு மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வழக்கில் இதுவரை பெண் உட்பட 3 பேரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

Advertisement