தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முரசொலி மாறன் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன்: முதல்வர் டிவிட்

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: டெல்லியில் கழகத்துக்கும் உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் முரசொலி மாறனின் நினைவுநாள். கலைஞர் மீது கொண்ட தூய அன்பு - ஒப்பிலா அறிவுக்கூர்மை - மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* ‘தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைத்தவர் முரசொலி மாறன்’

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: கலைஞரின் மனசாட்சி, மாநில சுயாட்சியை வலியுறுத்திய ஜனநாயகப் போர்க்குரல், டெல்லி அரசியல் அரங்கில் நம் கழகத்துக்கான கம்பீர இடத்தை உறுதி செய்தவர் - நம் எல்லோரின் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய முரசொலி மாறன் நினைவுநாள் இன்று. கலைஞருக்கும் - கழகத்துக்கும் உற்ற துணையாக இருந்து அதன்மூலம் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைத்த முரசொலி மாறன் புகழ் என்றென்றும் போற்றுதலுக்குரியது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.