தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது;
மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!
இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.