தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு அருகே சோகம்; சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: 2 மாணவிகள், ஒரு மாணவர் பலி

Advertisement

மூணாறு: மூணாறு அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாகர்கோவில் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் அடங்கிய 42 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இக்குழுவினர் மூணாறில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டு ரசித்தனர்.

நேற்று பிற்பகல் மூணாறு அருகே உள்ள குண்டளை அணைக்கட்டிற்கு சென்றனர். அப்போது மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆதிகா (19), வேனிகா (19) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த சுதன் (19), கெவின் (19) ஆகிய 2 மாணவர்கள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 19 மாணவர்கள் மூணாறு மற்றும் அடிமாலி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மூணாறுக்கு சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement