மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 82,727 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை இறுதியில் 0.66% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159 புள்ளிகள் அதிகரித்து 25,220 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.