மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்வு!
Advertisement
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்ந்து 82,694 புள்ளிகளானது. உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர முடிவில் 0.38% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எஸ்.பி.ஐ. 3%, பி.இ.எல். 2%, கோட்டக் வங்கி, மாருதி சுசூகி, டிரெண்ட் உள்ளிட்ட பங்குகள் 1% விலை உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகள் அதிகரித்து 25,330 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement