தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மும்பையில் நேற்றிரவு கனமழை; ஒரே குடும்பத்தில் இருவர் பலி: சில இடங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு

மும்பை: மும்பையில் பெய்த கனமழையால் விக்ரோலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அருகிலுள்ள ராய்கட் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழையால் சயான், பாந்த்ரா, அந்தேரி, செம்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விக்ரோலி பார்க் சைட் மலையோரப் பகுதியில் இருந்த குடிசை மீது பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன.

தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டனர். அவர்கள் உடனடியாக ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் மிஸ்ரா (50), அவரது மகள் ஷாலு மிஸ்ரா (19) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சுரேஷின் மனைவி ஆர்த்தி மிஸ்ரா (45) மற்றும் மகன் ருதுராஜ் மிஸ்ரா (20) ஆகிய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News