தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பையில் கனமழை காரணமாக மோனோ ரயில்களில் சிக்கித் தவித்த 800 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக மோனோ ரயில்களில் சிக்கித் தவித்த 800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பையில் 4-வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இடுப்பளவுக்கு மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மும்பை வடலாவில் இருந்து செம்பூர் நோக்கி கொட்டும் மழையிலும் சென்ற மோனோ ரயில் திடீரென அந்தரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நின்றது. மும்பையில் மின்தடை காரணமாக 2 மோனோ ரயில்கள் நடுவழியில் நின்றன. மும்பை மைசூர் காலனி, பக்தி பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே கனமழையால் மோனோ ரயில் சிக்கிக் கொண்டது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு கதறி அழுதனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஜன்னல்களை உடைத்து பயணிகளை காப்பாற்றினர். ஒரு மணி நேரமாக மோனோ ரயில் சிக்கித் தவித்த 500 பயணிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மும்பையில் மற்றொரு இடத்தில் மழையில் சிக்கிக் கொண்ட மோனோ ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்கப்பட்டனர்.

Advertisement

Related News