தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்: ஏக்நாத் ஷிண்டே!

மும்பை: பிரதமர் மோடி சிங்கம் போன்றவர். அதான் ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார் என மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில், மாநில துணை முதலமைச்சரும், ஷிண்டே அணியின் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிரொலி மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை குறித்தும் கடும் கருத்துகளை வெளியிட்டார்.

Advertisement

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணியின் அரசு, யாரோ ஒருவரின் அழுத்தத்தினால் பாகிஸ்தானை தாக்கத் தயங்கியது. இது ஒரு கோழைத்தனம் மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு செய்த துரோகம்,” என்று கூறினார். ஆனால் அதேநேரம் பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலடி பற்றி பேசும் அவர், ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சிங்கம். பாகிஸ்தான் நரி போன்றது. சிங்கத்தின் தோலை அணிந்தால் நரியால் சிங்கமாக முடியாது. மோடி எப்போதும் சிங்கமாகவே இருப்பார் என்றார்.

மேலும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை குறித்தும் ஷிண்டே கடுமையாக விமர்சித்தார். உத்தவ் தலைமையிலான சிவசேனா, இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்கியது. அது பாகிஸ்தானின் குரலாக மாறியது. அவர்களது தசரா கூட்டம் பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை தலைமை விருந்தினராக அழைத்திருக்கலாம் எனச் சாடினார்.

Advertisement

Related News