தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு..!!

கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் 144 அடியாக தண்ணீர் தேக்கி கொள்ள அனுமதி அளித்தது. 3 நபர் கண்காணிப்பு குழுவை அமைத்து அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செய்தது. குழுவானது தொடர்ந்து அணையை மேற்பார்வையிட்டு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டு 3 நபர் குழு கலைக்கப்பட்டு தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவுக்கு ஆணை வழங்கியது. அப்போது 7 நபர் கொண்ட முதன்மை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிற்கு சார்பாக துணை குழு அமைக்கப்பட்டு அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

Advertisement

அதில் தமிழக பிரிவினரும், கேரளா பிரிவினரும் உள்ளனர். இந்த குழுவினர் ஒவ்வொரு மாதமும் அணையினை பார்வையிட்டு அணையின் நிலவரங்களை முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 3ம் தேதி அணையை பார்வையிட்ட துணை கண்காணிப்பு குழு இன்று அணையை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து அணையின் பராமரிப்பு குறித்து இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு இன்று அனுப்ப உள்ளது. இதற்கான பணியினை தற்போது தொடங்கி அணையினை பார்வையிட்டு வருகின்றனர். மெயின் அணை உள்ளிட்ட அணையின் இதர பகுதிகளை பார்வையிட்டு முடிவுகள் முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு அனுப்ப உள்ளது.

Advertisement