தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையில் கண்காணிப்பு துணை குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் அணைகள் பாதுகாப்பு ஆணைய இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையில் தமிழக - கேரள அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழு அமைத்தது. அதனுடைய துணை குழு தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. குமுளி தேக்கடியில் இருந்து படகு மூலமாக முல்லை பெரியாறு அணைக்கு சென்று மெயின் அணை, பேபி அணை, கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஸட்டர்கள் குறித்தும் ஆய்வு நடத்துகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மழை பெய்து 142 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயரும் போது ஸட்டர்கள் திறக்கப்பட்டு கேரள பகுதிகளில் உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதனால் ஸட்டர்கள் முறையாக இயங்குகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதேபோல் முல்லை பெரியாறு அணையில் நீர்க்கசிவு குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதனை தொடர்ந்து தமிழக - கேரள அதிகாரிகளிடம் அணையின் மராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும் முல்லைபெரியாறு கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக - கேரள அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பவுள்ளனர்.

Related News