மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா
Advertisement
மூலங்குடி, வெட்டியப்பட்டி, ஆலவயல், செம்பூதி, மேலநிலை, செல்லூர், உலகம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று வலை, கூடை மற்றும் கொசுவலை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கியது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேனிக்கண்மாயில் அதிகளவில் மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ வரை இருந்தது. குறைந்தது ஒவ்வொருவரும் 5 கிலோ வரையிலான மீன்களை பிடித்து சென்றனர் என்றனர்.
Advertisement