தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகப்பேர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா சோதனை: அரசு டாக்டர் மீது வழக்குபதிவு

 

Advertisement

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு மாலை நேரத்தில் மட்டும் கர்ப்பிணிகள் அதிகளவில் வந்து சென்றுள்ளதால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்கேன் சென்டரில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சோதனை நடத்தி தெரிவித்து வந்துள்ளது தெரிந்தது. இதற்காக அதிக பணம் வசூலித்துவந்துள்ளனர்.

இதுசம்பந்தமாக தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவ இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்றிரவு அரசு மருத்துவ இயக்குனர் மீனாட்சிசுந்தரி தலைமையில், மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சென்று அங்கு காத்திருந்த கர்ப்பிணிகளிடம் நைசாக விசாரித்தபோது கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மீனாட்சிசுந்தரி ஸ்கேன் சென்டர் உள்ளே சென்று டாக்டரிடம் விசாரித்துள்ளார். அப்போது டாக்டர், ‘’சத்தியமாக கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று யாரிடமும் சொல்லவில்லை. உங்களுக்கு யாரோ பொய்யான தகவல் கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் கொடுத்த பெண்ணை வரவழைத்து விசாரித்தபோது நடந்தது பற்றி டாக்டர் ஒப்புக்கொண்டார்.

இதுசம்பந்தமாக அரசு மருத்துவ குழு கொடுத்துள்ள புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஸ்கேன் சென்டர் நடத்திவரும் டாக்டர் பகவதி வரதராஜனிடம் விசாரிக்கின்றனர். கடந்த 2 வருடங்களாக நடத்திவருகிறார். சென்னை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராகவும் உள்ளார். கருவில் இருப்பது ஆனா, பெண்ணா என்று சொல்வதற்கு அதிக பணம் வசூல் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் பகவதி வரதராஜன், உதவியாளர் அன்னாள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ஸ்கேன் சென்டர் பூட்டப்பட்டுள்ளது.

Advertisement

Related News