தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

15 நாளுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்க வேண்டும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும். வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கையை அளிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

Advertisement

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற முகாம்களில் கலந்துகொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரை சேர்த்திடும் வகையில் மேற்காணும் முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டார்கள். அதேபோல், வருகிற சட்டமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாள் தங்கள் தொகுதியில் தங்கியிருந்து மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, தலைமை கழக நிர்வாகிகள், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

* ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கனிமொழி எம்பி உடனிருந்தார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் உள்பட தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சந்திப்பின் போது நிர்வாகிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement