தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ம.பி.யில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்​கொடுமை புகார் எழுந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம் கடந்த 2005ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்​டனை​யும், ரூ.2,000 அபராத​மும் விதித்​தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்​திய பிரதேச உயர்நீதி​மன்​றத்​தில் அவர் மேல்முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த உயர்நீதி​மன்​றம், 2017ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

இந்​நிலை​யில், தண்​டனை காலத்​துக்​கும் கூடு​தலாக சிறை​யில் அடைத்து வைத்​திருந்​த​தாகக் கூறி சோஹன் சிங் உச்சநீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா மற்​றும் கே.வி.விஸ்​வ​நாதன் அமர்வு விசா​ரித்​தது. அப்​போது, தண்​டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடு​தலை செய்​யாதது அடிப்​படை உரிமையை மீறும் செயல் என கண்​டனம் தெரி​வித்​தனர். இதையடுத்​து, சோஹன் சிங்​குக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும், மாநிலத்​தில் இது​போல தண்​டனைக் காலம் முடிந்​தும் யாராவது விடு​தலை செய்​யப்​ப​டா​மல் இருக்​கிறார்​களா என வி​சா​ரணை நடத்​து​மாறு மத்​திய பிரதேச சட்ட சேவை​கள் ஆணை​யத்​துக்​கு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

Advertisement